Trending News

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது

(UDHAYAM, COLOMBO) – தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உண்ணாவிரதம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

தனக்கு பிணை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த விமல் வீரவங்ச மூவேளை உணவையும் நிராகரித்துள்ளார்.

அரசாங்க வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top