(UDHAYAM, COLOMBO) – கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற எதிர்ப்பின் போது மீனவர்கள் சிலருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நபர் ஒருவர் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவரொருவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து சிலர் கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இவ்வாறு எதிர்ப்பில ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது அங்கு வந்த மேலும் ஒரு குழுவினர் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.