வகைப்படுத்தப்படாத

உலங்கு வானுர்தி விபத்தில் 8 பேர் பலி

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவில் உலங்கு வானுர்தி ஒன்று மலையில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் பலியாகினர்.

இந்தோனேசிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா மாகாணத்தில் தமாக்கங்க் மாவட்டத்தில் எரிமலை ஒன்று வெடித்துள்ளது.

இதன்போது அனர்த்தத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக கடற்படை  உலங்கு வானுர்தி ஒன்று ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த உலங்கு வானுர்தியே விபத்துக்கு உள்ளானது.

இதன்போது குறித்த உலங்கு வானுர்தியில் மீட்புப் பணி வீரர்கள் நான்கு பேரும், மீட்கப்பட்ட பொதுமக்கள் நான்கு பேரும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேரூந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் பவுசர்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

පොලිස්පතිට සහ හිටපු ආරක්ෂක ලේකම්ට එරෙහි මුලික අයිතිවාසිකම් පෙත්සම් සලකා බැලීම අද