Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

உண்மையான பௌத்தர்களாகிய நாம் மக்களை போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்

(UTV | கொழும்பு) – உண்மையான பௌத்தர்களாகிய நாம் நாட்டையும் நாட்டு மக்களையும் மாண தலைமுறையையும் போதைப்பொருள் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தினூடாக சம்புத்த சாசனம் பாதுகாக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அது நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும்,பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் உண்மையான போதனைகளின் அடிப்படையில் நடைமுறை ரீதியான பௌத்த விழுமியத்தைக் கட்டியெழுப்புவது காலத்தின் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள மத வழிபாட்டுக் கட்டமைப்பைப் பாதுகாத்து அதன் மூலம் கலாசாரத்தைப் பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்றும்,மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது போலவே ஒவ்வொரு கிராமம் பூராகவும் பரவியுள்ள மது, புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையையும் ஒழிக்க வேண்டும் என்றும், உண்மையான மக்கள் சமூகமாக திகழ  வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தந்திரிமலை ரஜ மஹா விகாரையில் வருடாந்த கடின பின்கம புன்னிய உற்சவ நிகழ்வில் நேற்றைய தினம் இரவு (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். போதை பிசாசு பாடசாலை மாணவ சமூகத்தை கூட வேகமாக ஆட்கொண்டுள்ளதாகவும்,இவ்வாறான வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் பேரில் கிராமம் நகரம் தோறும் சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் பியர் உரிம பத்திரங்கள் வழங்குவது வருந்தத்தக்க விடயம் என்றும்,அரசாங்கத்தின் மீதும் அழுத்தம் கொடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சிகரெட் மற்றும் மது விநியோகம் செய்கின்றன என்றும்,சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மேலே செல்லும் இந்த பெரும் மாபியா சக்தி இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். முப்பது வருடகால யுத்தத்தினால் நாடு பாதிக்கப்பட்டது போன்று போதைப்பொருள் பயங்கரவாதத்தினால் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும்,இதிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது அன்புக்குரிய பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச ஆகியோரின் புன்னிய உபகாரத்தில் தந்திரிமலை ரஜ மஹா விகாரையில் வருடாந்த கடின புன்னிய உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්...
உள்நாடுசூடான செய்திகள் 1

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் நாமல்

(UTV | கொழும்பு) – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனம் காணப்படுகிறது. வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி எதிர்த்தரப்பினரை சாடுகிறார். ஆகவே, இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழர்களின் உணர்வெழுச்சிய அடக்க முடியாது – சாணக்கியன்

(UTV | கொழும்பு) – அரசும், பொலிஸாரும், படையினரும்ப யங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித்த மிழர்களை முடக்கப் பார்க்கின்றார்கள். தமிழர்களின் உணர்வெழுச்சியை அவர்களால் அடக்க முடியாது.” -இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவடட...
உள்நாடுசூடான செய்திகள் 1

பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் பூர்த்தி

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான அனைத்து வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். வென்னப்புவ பிரதேசத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலுடன் 80 பேர் வெளிநாடுக்கு செல்ல தயார் நிலையில்…!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச ஊழியர்களின் , ஓய்வூதியம் ஜனவரியிலிருந்து வழங்க தீர்மானம்!

(UTV | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையிலான வரி வருமான அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அரச வருமான பிரிவு கூட்டத்தின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் இடைக்கால தீர்வு நீதிமன்றத்தால் நிராகரிப்பு !

(UTV | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமான வழக்கு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டு கடந்த பத்து மாதங்களாக இடம்பெற்றுவரும் நிலையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜாகிலிய்யத்தை கக்கும் நியாஸ் – முன்னாள் புத்தள பிரதி நகர பிதா அலிகான் குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) -கடந்த காலங்களில் சில நியாயமான போராட்டங்களில் முன்னின்ற புத்தளம் அரசியலில் ஒரு பேசப்படும் நபராகத் திகழ்ந்த முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் கல்பிட்டி பிரதேச மக்களை இரண்டாம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

(UTV | கொழும்பு) – நாட்டில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் இரண்டும் நடத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலின் 2024 பட்ஜெட் வாக்களிப்பில் முஸ்லிம் MPகளின் நிலைப்பாடு!

(UTV | கொழும்பு) –    2024 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்பிக்கப்பட்ட இந்த வரவு...