வகைப்படுத்தப்படாத

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது

(UDHAYAM, COLOMBO) – தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உண்ணாவிரதம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

தனக்கு பிணை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த விமல் வீரவங்ச மூவேளை உணவையும் நிராகரித்துள்ளார்.

அரசாங்க வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விமல் வீரவங்ச அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பகமுவ பிரதேசத்தை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு பிற்போடப்பட்டது

கொள்கை ரீதியான அரசியல் தேவை -அமைச்சர் துமிந்த திசாநாயக்க

SLMC ordered to register all foreign graduates