உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மது ஒழிப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியில் நேற்று (12) மாலை நடத்திய சுற்றிவளைப்பின் போது பெண் சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லிகிராம் அளவுடய ஹெரோயின் போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் அநுராதபுரம் மாத்தளை சந்தி சமஹி மாவத்தை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 50 வயதுடைய பெண் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

Related posts

விமான நிலைய ஊழியர்களை மறு அறிவிப்பு வரும் வரை பணிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியையும் செலுத்தக் கோரிக்கை