நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நீதிபதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம், பிரதிவாதி ஹர்ஷ இலுக்பிட்டிய கடுமையான நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளதாக நீதியரசர் அறிவித்துள்ளார்.