உள்நாடு

ஹரின் பெர்னாண்டோவுக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் அழைப்பு

(UTV | கொழும்பு) – ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, நாளை(28) முற்பகல் 10 மணிக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய முற்பகல் 10 மணிக்கும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கடந்த தினங்களில் வெளிநாட்டில் தங்கியிருந்ததுடன் கடந்த 21 ஆம் திகதி புதன் கிழமை நாடு திரும்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர் ஹரினி

editor

தொடுவாவையில் சிக்கிய பெருந்தொகை பணம் – 8 பேர் கைது

editor