உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் – பறவைகள் பூங்காவின் உரிமையாளர் தலைமறைவு!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை கைது செய்வதற்காக நேற்று (15) ஹம்பாந்தோட்டை பகுதியிலும் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சோதனை செய்த போதிலும், அவர் தப்பிச் சென்றதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 8 சொகுசு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 க்ரூஸர்கள் உட்பட 21 மோட்டார் சைக்கிள்கள் சமீபத்தில் ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவை பூங்காவில் உள்ள ஒரு களஞ்சியத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

Related posts

ஆளுங்கட்சி எம்.பி யின் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் – தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக எச்சரிக்கை

editor

சமூக ஊடகங்களில் அவமதிப்பு – பொலிஸ் நிலையம் சென்ற பிரபல சிங்கள பாடகர் இராஜ்

editor

இன்று முதல் வெளிநாட்டு தபால் கட்டணம் உயர்வு