உள்நாடு

ஹபரனை விவகாரம் : விசாரணை குழு நியமனம்

(UTV | கொழும்பு) – ஹபரனை பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ சேவையில் இருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைமை வலுவடைந்ததன் காரணமாக அது தொடர்பிலான உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்காக, உரிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைபாடு ஒன்று செய்யப்பட்டுள்ளமையாலும் அது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிகைகளுக்காக குறித்த விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

   

Related posts

பலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் பாதிப்பு

editor

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு