உள்நாடுசூடான செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

(UTV|COLOMBO)- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெறவுள்ளது

இந்த கலந்துரையாடல் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் கட்சி மறுசீரமைப்பு செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் மாயம்.

2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்! விவசாயத்தை முன்னேற்றாமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது:ஜனாதிபதி

எரிபொருள் விலை குறித்து வெளியான மகிழ்ச்சியான செய்தி!