உள்நாடு

ஸ்ரீ லங்கன் விமான சேவையிடம் இருந்து விசேட கோரிக்கை

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொவிட் 19 என இனங்காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் தமது நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடை செய்துள்ளன.

அதற்கமைய இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து கட்டார் இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பங்களாதேஷ், சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன்ஸ், தென்கொரியா, மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

கட்டார் இராஜ்ஜியத்தின் குறித்த தீர்மானத்திற்கு ஒரு விமான நிறுவனமாக இணங்க வேண்டியுள்ளதாகவும் அதனால் தமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக கவலை வெளியிடுவதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் குறித்து IMF அதிரடி அறிவிப்பு

editor

இலங்கை இன்னொரு மொரோக்கோவாக மாற வேண்டாம் – மஹிந்த

ஜனாதிபதி பதவியையும், 2/3 பெரும்பான்மை பலத்துடனும் இருக்கும் இந்த அரசாங்கத்தினால் மருந்துப் பற்றாக்குறையை இன்னும் தீர்க்க முடியாதுபோயுள்ளது – சஜித் பிரேமதாச

editor