உலகம்

ஸ்பெயினில் துக்க தினம் அனுஷ்டிப்பு

(UTV| கொழும்பு)- ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, 10 நாட்களுக்கு துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச பேச்சாளர் மரியா ஜேசுஸ் மொன்டெரோ ( Maria Jesus Montero) தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடு முழுவதிலும் உள்ள பொதுக் கட்டடங்கள் , கடற்படையின் கப்பல்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 283,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27,117 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விமானம் – 17 பேர் காயம்

editor

“டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் சென்ற ஐவரும் உயிரிழப்பு”

இந்தியா வருகிறது ரஷ்யாவின் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்