உலகம்

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

(UTV – ஸ்பெயின்) – ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சஞ்சே (Pedro Sanchez) தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த அவசர காலநிலை ஜூன் 21ம் திகதி வரை நீடிக்க அந்நாட்டு பாராளுமன்றமும் ஒப்புதல் வழங்கியுள்ளது., அதன் பின்னர் அரசாங்கம் அவசர காலநிலையை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் பெட்ரோ தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினில் இதுவரை 286,308 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 27,125 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 196,958 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

எந்திரன் சிட்டியை போல கொலை செய்த ரோபோ!

ரைஸின் மரணத்திற்கு முன் நோட்டமிட்ட CIA

இங்கிலாந்து பிரதமர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்