உள்நாடு

வைத்தியர்கள், ஊழியர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் கைவிடப்பட்டது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுத்து வந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை எதிர்த்து, குறித்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

தைப்பொங்கலுக்கு பின் அரச ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி என்கிறார் ஜனாதிபதி!