உள்நாடுபிராந்தியம்

வைத்தியர் மீது தாக்குதல் – பதுளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான வைத்தியர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்பானது இன்று (17) மாலை 4.00 மணி வரை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட வாக்களிப்பு ஏற்பாடு

கல்வி அமைச்சின் அறிவித்தல்

ஒலுவில் ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை கைது – வெளியான திடுக்கிடும் தகவல்கள்

editor