உள்நாடு

வெள்ளியன்று 12 மணி நேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை (வடக்கு/தெற்கு), நாகொட, போம்புவல, பிலமினாவத்தை, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தர ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

வேலையில்லா பட்டதாரிகளுக்கு இப்போதாவது நியாயத்தை பெற்றுக் கொடுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை