காற்றுடன் கூடிய கடும் மழை கடந்த சில தினங்களாக பெய்து வருவதால் நுரைச்சோலை, சன்ஜிதாவத்தை கிராமம் வெள்ள நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகவும் சில வீடுகளுக்குள் வெள்ள நீர் சென்றுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
சரியான முறையில் வெள்ள நீரை வெளியேற்றும் முறை இல்லாமை குறித்து கிராம ஒவ்வொரு மழைக்கும் இவ்வாறான பிரச்சினையை சந்திக்க நேரிட்டுள்ளது.
கொய்யாவாடி பள்ளிவாசலுக்கு முன்னால் நின்ற வேம்பு மரம் ஒன்று வாசியாசலைக்கு மேல் விழுந்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.
இதவேலை கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் இன்றைய தினம் (28) காலை முதல் பலாவி தொடக்கம் கற்பிட்டி வரையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
