உள்நாடு

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோருக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

நாட்டில் தற்பொழுது காணப்படும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பின்னரே காணப்படுகின்றதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களை ஏழு நாட்களுக்குப் பிறகு வீடுகளுக்கு அனுப்ப முடியாது என்றும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!