உள்நாடு

வெலி ஓயாவில் நீராடச் சென் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

(UTV |  பதுளை) – ஹல்தமுல்ல – வெலி ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பதுளை – ஹல்தமுல்லை – களுபான – வெலி ஓயாவில் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ள தந்தையையும், மகனையும் தேடும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நான்கு பேரில், தந்தையும், மகனும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

இதேநேரம், ஏனைய இரண்டு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

editor

பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது

வீதியை விட்டு விலகி தடம்புரண்ட டிப்பர் வாகனம்

editor