உள்நாடுவீடியோ

வீடியோ – செம்மணியில் சிறு குழந்தையின் எலும்புக்கூடு பையுடன் மீட்பு – இதுவரை செம்மணியில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்

இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம்(29) பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்புக் கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்: தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி!

மேலும், பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அதில், ஒரு சிறு குழந்தையின் எலும்புக்கூடு நீல நிற பை மற்றும் சில உடை துணிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வு பணிகள்

அதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்:  தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி!

அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

செம்மனி நடந்தது என்ன.? இந்த வீடியோவை பாருங்கள்

Related posts

கொழும்பு கிரிஷ் கட்டிட தீ பரவலுக்கான காரணம் வௌியானது – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

editor

ராஜித வீட்டில் CID சோதனை

 சட்டவிரோதமாக மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது