உள்நாடு

விஸ்வ புத்தருக்கு மீண்டும் விளக்கமறியல்!

(UTV | கொழும்பு) –

“விஸ்வ புத்தர்” என்ற தேரரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று புதன்கிழமை நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

“விஸ்வ புத்தர்” என்று தன்னை அடையாளப்படுத்தி இவர் கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தம்

editor

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | வீடியோ

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 787 : 02