உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பலி

திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்து பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் மூதூர் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கே.நாகேஸ்வரன் (71வயது) உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-அப்துல்சலாம் யாசீம்

Related posts

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

பல்கலைக்கழக விண்ணப்பங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

திருமதி இலங்கை உலக அழகி 2025 இற்கான பட்டத்தை சுவீகரித்த சபீனா யூசுப்

editor