உள்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – பொதுத்தேர்தல் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்ட நிலையில், எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேசிய அடையாள அட்டை உரித்துடைய அனைத்து பிரஜைகளும் தங்களது பெயர்களை தேர்தல் பட்டியலில் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் பெயர் பட்டியலை பூர்த்தி செய்து கிராம அலுவலகரிடம் அதனை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தாய் விமான சேவைகள் இரத்து

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு – 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

editor

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை