உள்நாடு

வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி

(UTV | கொழும்பு) – கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சடலத்தை ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனத்திற்கான பாதுகாப்பை வழங்கிய பொலிஸ் கார் ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் விபத்துக்குள்ளானது.

இன்று காலை (05) நடந்த விபத்தில், இந்த காரில் பயணித்த உப பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை அவருடன் பயணித்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மூவரும் ஏனைய பயணிகள் மூவருமென ஆறு பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts

ரஷ்யாவின் உறவினை உடைக்கும் தற்போதைய இலங்கை அரசு – மைத்திரி சாடல்

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கை கோர்த்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!

editor

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!