அரசியல்உள்நாடு

வாகன இறக்குமதி மூலம் 5 மாதங்களில் 136 பில்லியன் ரூபா வருமானம்

வாகன இறக்குமதியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் 450 பில்லியன் ரூபா வருமானத்தை இந்த வருட இறுதிக்குள் அடைய முடியுமென திறைசேரி அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சுங்கப் பிரிவில் இருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.

Related posts

விமான நிலையங்கள் 22ம் திகதி முதல் திறப்பு

எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor

பாராளுமன்ற அமர்வு : இரண்டு நாட்களுக்கு மட்டு