அரசியல்உள்நாடு

வாகன இறக்குமதிக்கான சாத்தியப்பாடு தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானிக்கிறது என்றால், அதற்கான வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்காமல் பராமரிக்க தீர்மானித்தள்ளதாக தெரிவித்தார்.

“ஏற்கனவே சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக தளர்த்துவது முக்கியமான முடிவு. அந்நியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

Related posts

பொலித்தீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முற்றாக தீயில் எரிந்து நாசம்

editor

இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 6 வயது சிறுமி பலி

editor

அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த விடுத்துள்ள அறிக்கை…