உலகம்

வழமைக்கு திரும்பும் காஸா – பாடசாலை வகுப்புகள் மீண்டும் ஆரம்பம்!

காஸாவின் மத்திய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரின் விளைவாக 97% பள்ளிகள் சேதமடைந்து இயங்காமல் இருந்த நிலையில், குறைந்தது 6 லட்சம் குழந்தைகள் முறையான கல்வியின்றி காஸாவில் தவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அங்கு போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், காஸா நகரின் அருகிலுள்ள ஐ.நாவின் UNRWA பாடசாலையில் மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

நீண்ட காலமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடமாக மாறிய அல் – ராஜி பாடசாலையிலேயே தற்போது மீண்டும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்க தொடங்கியுள்ளனர்.

Related posts

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் தான் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

editor

கொரோனாவின் வீரியம் – ஸ்பெயின் மீண்டும் முடக்கம்

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமல் அகலங்க!

editor