உள்நாடுவணிகம்

வரலாற்றில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது.

அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (14) 23,708.70 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 12 ஆம் திகதி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 23,659.70 அதிகூடிய புள்ளிகளாக பதிவாகியிருந்தது.

அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 100.90 புள்ளிகள் உயர்ந்து 23,708.70 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு ரூ. 9.26 பில்லியன் ஆக பதிவாகியுள்ளது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் குறித்த FBI யின் அறிக்கையை இலங்கை மறுத்தால் டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைவார் – ரணில் எச்சரிக்கை

editor

அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து

சுகாதார அமைச்சராக கெஹெலிய, பவித்ராவுக்கு போக்குவரத்து அமைச்சு