வகைப்படுத்தப்படாத

வத்தளை, களனி பிரதேசங்களில் நாளை நீர் விநியோகத் தடை

(UDHAYAM, COLOMBO) – வத்தளை மற்றும் களனி பிரதேசங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு புணரமைப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 9.00 மணிவரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய களனி, பெஹலியகொடை, வத்தளை நகரசபை அதிகார பிரதேசங்கள் மற்றும் ஹெந்தலை பகுதியிலும் இந்த 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

மக்களின் உடல் வெப்பத்தை அளக்க இராணுவத்தினர் களத்தில்

மணித்தியாலத்தில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் ஹட்டன் ஆர்பாட்டத்தில் தொண்டமான் உறுதியையடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டது கடைகள் அடைப்பு போக்குவரத்தும் தடை