உலகம்

லொறியுடன் நேருக்குநேர் மோதிய வேன் – 7 பெண்கள் உட்பட 8 பேர் பலி – 4 பேர் காயம்

பிகார் மாநிலம் பாட்னா புறநகரில் மினி வேனும், லொறியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

பாட்னா – நாலந்தா எல்லைக்கு அருகில் உள்ள ஷாஜகான்பூரில் நேற்று (23) அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் காயம் அடைந்த நால்வரும் அருகில் உள்ள அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து லொறி சாரதி தப்பி ஓடிவிட்டார். அவரை பொலிஸார் தேடுகின்றனர்.

விபத்து குறித்து முதல்வர் நிதிஷ் குமார் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

பிகாரில் மற்றொரு துயர சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவின் இசை உலகில் பெரும் அதிர்ச்சி – பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்

editor

கியூபாவில் எரிபொருள் விலை உயர்வு!

உலகளவில் கொரோனா 11.35 கோடியைக் கடந்தது