உள்நாடு

ரிப்கான் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை இம்மாதம் 20ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தலை மன்னார் பகுதியில் உள்ள நிலமொன்றிற்கு போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டு இவர் கடந்த 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்

குறித்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

“மக்கள் பலத்தை காட்ட தயாராகும் மொட்டுக்கட்சி- முதற்கூட்டம் அனுராதபுரத்தில்”

ஐ.தே.கட்சிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor