உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி – இருவர் படுகாயம்

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி இன்று (12) காலை விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டியின் இயந்திரம் கழன்று பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதும் நேரத்தில் சாரதியும் பெண் ஒருவரும் முச்சக்கர வண்டியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த நேரத்தில் ரயில் கடவை கேட் மூடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முச்சக்கர வண்டியின் சாரதியின் இளைய சகோதரனே ரயில் கடவை கேட் காவலர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்து – நால்வர் கைது

editor

SJBயில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை :அர்ஜுன ரணதுங்க

அமைச்சரவையில் இன்று 21வது திருத்தம்