உள்நாடுபிராந்தியம்

ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலத்த காயம்

ரயிலில் மோதுண்ட பெண்ணொருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா கிளங்கன் பிரதேச வைத்தியசாலையில் இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் 1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பொடி மெனிக்கே ரயில் இயக்கப்பட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது குறித்த பெண் ரயிலில் பாய்ந்துள்ளதாகவும், விபத்தில் படுகாயமடைந்த பெண் நீண்ட நேரம் ரயில் பாதைக்கு அருகில் நின்றுகொண்டு இருந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இரட்டைக் கொலை தொடர்பில் இரண்டு பேர் கைது

editor

அமைதியற்ற முறையில் நடந்து கொண்டால் சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அர்ச்சுனாவுக்கு பிரதி சபாநாயகர் கடுமையாக எச்சரிக்கை

editor

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor