சூடான செய்திகள் 1

ரயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் நாடு கடத்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து நடத்திய விசாரணையின் பின்னர் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் கஞ்சா வைத்திருந்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரபல நடிகர் ரயன் வேன்ரோயன் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

சவால்களைக் கண்டு ஓடி ஒளிபவர்கள் நாமில்லை…

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…

ஆர்பாட்டத்தால் வோர்ட் பிளேஸ் வீதியில் பாரிய வாகன நெரிசல்