அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குழாம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பிமல் ரத்னாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று (30) விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

விமான நிலையத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும், அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் விமான நிலைய அதிகாரிகள், தொழிநு ட்பவியலாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினர்.

குறித்த அமைச்சர் குழாமில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா உள்ளிட்டோர் உள்ளடங்கி இருந்தனர்.

Related posts

வெலிக்கடை சிறைக் கலவரம் : ரஞ்சனுக்கு மரண தண்டனை

சீமெந்து விலை மீண்டும் உயரும் சாத்தியம்

நாட்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி!