உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் புல்லுகுளத்தில் இனந்தெரியாத சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் இன்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு மாலை 5:30 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உயிரிழந்தவர் யார், உயிரிழப்புக்கான காரணம் என்பது குறித்து இதுவரை தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸாரும், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

கர்நாடக தேர்தலில் வென்றார் ராகுல் காந்தி – ஹிஜாப் அணிவதை நிறுத்திய அமைச்சர் தோல்வி

இந்திய படகுகள் யாழில் ஏலம்

அரசிற்கு மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை