உள்நாடு

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு ஒன்று இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து  மாவட்ட பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரின் உதவியுடன் முற்றுகை இடப்பட்டுள்ளது.
குறித்த முற்றுகையில் பருத்தித்துறை மற்றும் நீர்வேலி பிரதேசங்களை சேர்ந்த பெண்களும் ஆண் ஒருவர் உள்ளடங்கலாக வீட்டின் உரிமையாளரான முதியோர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

Related posts

கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமனம்

பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட இந்தியா உதவுகிறது

இந்திய உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு