உள்நாடு

யாழ். கோப்பாய் பகுதியில் இரு நாட்களில் 50 பேர் கைது

(UTVNEWS | கொவிட் – 19) – கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடினர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதி இன்றி ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைதானவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

editor

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!