உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி கோர விபத்து – 17 வயதுடைய பாடசாலை மாணவன் பலி

பண்டாரகம பொலிஸ் பிரிவின் பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் பிரவேசிக்க சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியன பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் என தெரியவந்துள்ளது.

சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

editor

தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்

பிரதமர் ஹரிணி, இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

editor