உள்நாடு

மோசமான வானிலை – அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து

நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக, ஒரு அதிகாரி தான் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சேவைக்குச் சமூகமளிக்க முடியாவிட்டால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சேவைக்குச் சமூகமளிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அவசர அனர்த்த நிலைமைகளுக்கான துரித அழைப்பு இலக்கங்கள்:

அவசர அழைப்பு இலக்கங்கள்: 117, 119

சுவசரிய சேவை (Suwasariya Service): 1990

தீயணைப்புப் பிரிவு: 110

இராணுவத் தலைமையகம்: 113

விமானப்படைத் தலைமையகம்: 116

ஆகிய இலக்கங்களுக்கு அழைக்கலாம்.

Related posts

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயது நபருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

editor

கடவுச்சீட்டு வழங்கும் பனி மீண்டும் ஆரம்பம்