உள்நாடு

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பயணத்தடையை மீறுவோரை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியுள்ள நபர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவர் இலங்கைக்கு

BREAKING NEWS – தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்

editor

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்