நமது நாட்டின் நலன்புரி அரசின் முக்கி அங்கமான சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் சரிவும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
தேசிய வைத்தியசாலையில் காணப்படும் 4 MRI ஸ்கேனர்களில் 3 ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதய நோயாளிகள் வைத்தியசாலைகளில் பெரும் சேவைகளுக்கு மேலதிக மருந்துகள் மற்றும் பிற பொருட்களைப் பெறுவதற்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கும் மேல் மேலதிகமாக செலவிட வேண்டியுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், மயக்க மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றன. தனியார் மருந்தகங்களில் கூட, இந்த மருந்துகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றன.
நமது நாட்டிற்குக் கிடைத்த மிக உன்னத பரிசான இலவச சுகாதார சேவை, வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் இலவசமான ஒன்றாகவே அமைந்து காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சேவைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இலவச சுகாதாரம் என்பது அரச வைத்தியசாலையில் இருந்து மருந்துச் சீட்டைப் பெற்று தனியார் மருந்தகத்தில் மருந்து வாங்கும் நடவடிக்கையல்ல. எனவே இந்த இலவச சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பிலியந்தலை மாகந்தன சங்கல்ப விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
🟩 மூளைசாலிகள் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே இறப்பு விகித எண்ணிக்கை அண்மையில் 25% ஆக அதிகரித்துள்ளது. தொற்றா நோய்கள் தான் இதற்கு காரணம் என்பதால், ஆரோக்கியமான சமுதாய வாழ்க்கை முறைகளை நோக்கி எமது வாழ்வை நாம் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். தற்சமயம் மூளைசாலிகள் வெளியேற்றம் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றது.
படித்தவர்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கொலைக் கலாச்சாரம் நாட்டை ஆக்கிரமித்துள்ளது. அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்குமொரு சமூகம் உருவாக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 இந்தக் கொலைக் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தக் கொலைக் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கொடூரமான கொலைகாரர்கள், பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கும், மக்கள் வாழும் சூழலை உருவாக்குவதற்கும் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இதன் ஊடாக பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்குத் தேவையான வலுவானதொரு சட்டம் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பை நிறுவுவது சகல அரச மற்றும் அரச சாரா சிவில் சமூகத்தினது பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.