உள்நாடு

மூன்று விவசாயிகளின் உயிரினை பறித்த மின்னல்

(UTV | முல்லைத்தீவு) – முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் நேற்று(15) மாலை உயிரிழந்தனர்.

தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் கடும் மழையு பெய்துள்ளதுடன், மின்னல் தாக்கமும் ஏற்பட்டிருந்தது.

இதன்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குமுழமுனை மேற்கு, குமுழமுனை மத்தி, வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதான ஆண்கள் மூவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Related posts

மனோராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை – மனோ கணேசன்

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 4,000 மெட்ரிக் தொன் அரிசி

editor

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு