அரசியல்உள்நாடு

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

அமைச்சுக்களின் செயலாளர்கள் மூவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அண்மையில் (08) அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளராக டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக எஸ். ஆலோகபண்டார மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளராக பி.கே.கே.கே. ஜினதாச ஆகியோரின் நியமனங்களுக்கு இவ்வாறு உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

Update – ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பலி

editor

“பெற்றோர் மீது தேவையற்ற சுமை இல்லை” – கல்வி அமைச்சு