உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார் தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பீப்பாய்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர்களை தேடி மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

“ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது”