அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உடல் பாதுகாக்கப்பட வேண்டும் – அஜித் ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ச நாட்டின் புகழ்பெற்ற நபராக மாறினார்.

எனவே, அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போன்ற மஹிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று ராஜபக்ச கூறினார்.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பிணையில் விடுதலை

editor

அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொடர்கின்றது – சாணக்கியன் எம்.பி காட்டம்

editor

இஸ்லாத்தை அவமதித்த வழக்கு மார்ச் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!