உள்நாடு

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் நேற்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல் பத்தர பத்மே தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாடு அளித்தமை தொடர்பிலேயே முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி கைது செய்யப்பட்டார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று வெளியிட்ட விசேட அறிக்கை

editor

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில் – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

மேல் மாகாணம் : இதுவரையில் 256 பொலிஸார் சிக்கினர்