முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டச் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு போதுமான காலம் கடந்து விட்டதால் அவரிடம் சான்றிதழ் இல்லை என்று தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்று (20) தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
அசோக ரன்வல தனது கலாநிதி பட்டச் சான்றிதழை வழங்குவதாக அளித்த வாக்குறுதி ஒரு வருடத்ததுக்கும் மேலாகியும் நிறைவேற்றப்படவில்லை.
இதன் விளைவாக, ஒரு கட்சி என்ற அவருக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச அரசியல் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
