அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி ஹரீஸ் தலைமையில் மர்ஹூம் அஷ்ரஃப்பின் நினைவு நிகழ்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 25 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு “தலைவர் தினம்” நினைவுப் பேருரையும், கத்தமுல் குர்ஆனும், துஆ பிரார்த்தனையும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கல்முனைக் காரியாலயத்தில் இன்று (16) நடைபெற்றது.

ஹரீஸின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், ஹாபிழ்கள், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்துக்காக விசேட துஆ பிரார்த்தனை செய்தனர்.

எச்.எம்.எம்.ஹரீஸின் கல்முனை காரியாலயமானது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் காலத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை பிராந்திய காரியாலயமாக இயங்கிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

-பாறுக் ஷிஹான்

Related posts

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்

மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது!

editor

புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!